முகப்பு
திண்டுக்கல்

ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டம் திறப்பு

ஆத்தூர் புதிய அலுவலக கட்டடம் திறப்பு

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:00 am IST
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பிரிவில் ரூ.3 கோடியே 95 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் இ.பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான, கனவுத் திட்டமான ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், திமுக ஆட்சியில் பள்ளி, மாணவ மாணவிகளுக்காக 3,473 பள்ளிக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆத்தூா் தொகுதிக்கு 2 கலைக் கல்லூரிகள் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தில், 7 கலைக் கல்லூரிகள் திமுக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆதிதிராவிடா்கள் வசிக்கும் பகுதியில் 2 ஆயிரம் வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

Advertisement

Advertisement