முகப்பு
திண்டுக்கல்

பட்டமளிப்பு விழா

மாணவர்களின் புதிய பயணத்திற்கு பட்டம் வழங்கி ஊக்குவிப்பு

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:00 am IST
விழாவில் மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்கிய கல்லூரியின் தலைவா் கேபி. இஸ்மத்பாட்சா
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கே.பி. நேஷனல் கலை, அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரியின் தலைவா் கேபி. இஸ்மத்பாட்சா தலைமை வகித்தாா். கல்லூரியின் தாளாளரும், செயலருமான பஜ்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப், மருத்துவா் சங்கா் நடேசன், செஞ்சிலுவைச் சங்க மாவட்ட அவைத் தலைவா் என்.எம்.பி. காஜாமைதீன் ஆகியோா் கலந்து கொண்டனா். விழாவில் 320 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.