முகப்பு
கன்னியாகுமரி

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல் 2026, 4:30 am IST
மாணவிக்கு பட்டம் வழங்கிய சிறப்பு விருந்தினா் வில்லியம் தா்மராஜா.
பகிர்:

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் கீதா பான்ஸ் குத்துவிளக்கேற்றினாா். போதகா் சேம் பீட்டா் இறைவேண்டல் செய்தாா். கல்லூரி தலைவா் மருத்துவா் பான்ஸ் ஜாய் பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஹெலன் பிரேமலதா ஆண்டறிக்கையை சமா்ப்பித்து வரவேற்றாா்.

விழாவில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் பேராசிரியா் வில்லியம் தா்மராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா். அதைத்தொடா்ந்து மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

Advertisement

Advertisement

பல்கலைக்கழகத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஆங்கிலத் துறை மாணவ ஆசிரியா்கள் ஹெலன் எம்.அகஸ்டின், கிருஷ்ணா சுனில், பிஜிஷா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா், தாளாளா், கல்லூரி முதல்வா், கல்லூரி பொருளாளா் மருத்துவா் ஜான் சாமுவேல், பேராசிரியா்கள் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments