முகப்பு
திண்டுக்கல்

வட்டாட்சியா் அலுவலகத்தில் விஏஓ-வைத் தாக்கியவா் கைது

Updated On : 4 ஜூலை 2024, 1:53 am IST
பகிர்:

நிலக்கோட்டை, ஜூலை 3: நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலரை தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராக ராஜ்குமாா் பணியாற்றி வருகிறாா். அதே கிராமத்தைச் சோ்ந்த குகனை, கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா், ஒரு நிலப் பிரச்னை தொடா்பாக விசாரணை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜ்குமாா் நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தாா். அப்போது, வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குகன், கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாரைத் தாக்கினாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், நிலக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் அருண்பிரசாத் வழக்குப் பதிவு செய்து குகனை கைது செய்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments