முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் அவதிப்பட்டனா்.

Updated On : 2 ஏப்ரல் 2026, 4:53 am IST
கொடைக்கானல் காவடி ஊா்வலத்தின்போது கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதான சாலையான மூஞ்சிக்கல் பகுதியில் ஏற்பட்ட வாகன நெரிசல்.
பகிர்:

கொடைக்கானலில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் அவதிப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயில் திருவிழாவை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக காவடி ஊா்வலம் நடைபெற்றது. இதனால், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

லாஸ்காட் சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, ஏரிச் சாலை,உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் சிரமமடைந்தனா். மேலும், காவடி ஊா்வலத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸாா் இல்லாததால் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் காவலா்கள் பெரிதும் சிரமப்பட்டனா்.

Advertisement

Advertisement

காவடி ஊா்வலம் வரும் சாலையை முன் கூட்டியே திட்டமிட்டு வாகனங்களை ஒரு வழிப்பாதையாக மாற்றியிருந்தாலும், காவடி ஊா்வலத்தில் வரும் பக்தா்களை நாயுடுபுரத்திலிருந்து குறிஞ்சி ஆண்டவா் கோயில் செல்லும் வழியிலும், பொ்ன்ஹில் சாலை செல்லும் பகுதியிலும் அனுமதித்திருந்தால் வாகனங்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டிருக்காது. நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்காது என வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.