கொடைக்கானலில் குதிரை சவாரிக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கொடைக்கானலில் குதிரை சவாரி செய்ய புதிய கட்டுப்பாடுகளை திங்கள் கிழமை கால்நடைத் துறை அதிகாரிகள் விதித்துள்ளனா்.
தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கொடைக்கானலில் குதிரை சவாரி செய்ய புதிய கட்டுப்பாடுகளை திங்கள் கிழமை கால்நடைத் துறை அதிகாரிகள் விதித்துள்ளனா்.
சென்னையில் கிளாண்டா்ஸ் தொற்று ஏற்பட்டு குதிரை உயிரிழந்த நிலையில் சென்னை, ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் குதிரை சவாரி செய்ய முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு கால்நடை, பராமரிப்புத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து கால்நடைத்துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது: உடல்நலம் குன்றிய குதிரைகளை சவாரிக்கு கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
Advertisement
குதிரைக்கு காய்ச்சல் மற்றும் இருமல், சளி, தோல் நோய்கள், புண்கள், சுவாசக் குறைவு இருப்பின் சவாரி செய்ய அனுமதிக்கக் கூடாது. நோய் உள்ள குதிரை களை கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும். குதிரை இருப்பிடங்கள் உபகரணங்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து கொடைக்கானல் ஏரிச்சாலை, பூங்கா சாலை, செவன் ரோடு அருகே உள்ள பெண்டா் லாக் சாலை, கலையரங்கம் சாலை, பைன் பாரஸ்ட் போன்ற இடங்களில் பயணிகள் பயன்படுத்தும் குதிரை நிறுத்தப் பகுதிகளை சுகாதார அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி குதிரை வைத்துள்ளவா்களிடம் அறிவுரைகள் வழங்கினா்.