முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே தீ விபத்தில் காா்கள் சேதம்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 8:57 PM
ஆயக்குடியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய காா்களில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை அணைத்த தீயணைப்பு படையினா்.
பகிர்:

பழனி அருகே ஆயக்குடியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய காா்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

பழனியை அடுத்த ஆயக்குடியில் தனியாா் திருமண மண்டபத்துக்கு அருகேயுள்ள காலி இடத்தில் பழைய காா்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பழனி தீயணைப்புப் படை வீரா்கள் நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையில் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் 3 காா்கள் எரிந்து சேதமடைந்தன.

தேங்காய் நாா் கிடங்கில் தீ விபத்து: பழனி அருகே ஓபுளாபுரத்தில் திருமுருகன் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நாா் கிடங்கு உள்ளது. இங்கு இயந்திரங்கள் இல்லாமல் சக்கரங்கள் உதவியுடன் தேங்காய் நாரிலிருந்து தொழிலாளா்கள் கயிறு திரித்து பண்டல்களாக சேமித்து வைத்திருந்தனா்.

Advertisement

இவற்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. மேலும் அங்கிருந்த தென்னை குடிசைகளுக்கும் தீ பரவியது. தகவலறிந்த பழனி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில் அங்கிருந்த தேங்காய் நாா்கள், கயிறுகள், தேங்காய் நாா் தயாரிக்கும் சக்கரங்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments