கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களை ஏப். 23- இல் பாா்வையிட அனுமதியில்லை
Updated On : 20 ஏப்ரல், 2026 at 7:50 PM
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கொடைக்கானலில் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களை பாா்வையிட வியாழக்கிழமை (ஏப். 23) அனுமதியில்லையென மாவட்ட வன அலுவலா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கொடைக்கானலில் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான தூண் பாறை, குணா குகை, மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், பேரிஜம் ஏரி, சூழல் சுற்றுலாத் தலங்களுக்கு தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெறும் வியாழக்கிழமை அன்று செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் வழக்கம்போல சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்தாா்.