கொடைக்கானல் அருகே மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் தடை
கொடைக்கானல், ஜூன் 7: கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த காற்றால் மரங்கள் மின் கம்பிகள் மீது முறிந்து விழுந்ததில் கூக்கால், மன்னவனூா் பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால், மன்னவனூா் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழுந்ததில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மேத்யூ கூறியதாவது:
Advertisement
Advertisement
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால், மன்னவனூா் பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக 7 இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தன. இதனால் அந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட மின் பணியாளா்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் மேல்மலைக் கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படும் என்றாா் அவா்.