முகப்பு
திண்டுக்கல்

பழனியில் தமிழ்ப்புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை கண்டித்து, பழனியில் தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 2:52 am IST
பழனி ரயிலடி சாலை பெரியாா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் கட்சியினா்.
பகிர்:

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை கண்டித்து, பழனியில் தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பழனி ரயிலடி சாலையில் பெரியாா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் இரணியன் தலைமை வகித்தாா். இந்திய குடியரசு கட்சி மாவட்டத் தலைவா் ஆறுமுகம், ஆதித்தமிழா் கட்சி வினோத், அருந்ததியா் நலச்சங்க தலைவா் நாகராஜ் உள்ளிட்டோா் கண்டன உரை நிகழ்த்தினா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை கண்டித்தும், ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரியும், வேலாயுதம்பாளையம் புதூரில் அருந்ததியா் மக்களை தாக்கிய நபா்களை கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments