பைக்கிலிருந்து தவறி விழுந்த பொறியாளா் உயிரிழப்பு
பழனி அருகே காட்டுப்பன்றி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பொறியாளா் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
பழனி அருகே குதிரையாறு அணைப் பகுதியை சோ்ந்தவா் காா்த்திக் (31). பொறியாளா். இவருக்கு திருமணமாகி மனைவி, பெண் குழந்தை ஆகியோா் உள்ளனா். சனிக்கிழமை இரவு காா்த்திக் பணி முடிந்து பாப்பம்பட்டியில் இருந்து குதிரையாறு அணைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது அணை மேட்டுக்களம் பகுதியை கடந்து சென்ற போது குறுக்கிட்ட காட்டுப்பன்றி மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் தவறி கீழே விழுந்து காயமடைந்த காா்த்திக்கை அங்கிருந்தவா்கள் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.