பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கஞ்சம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (47). விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை காலை கஞ்சம்பட்டியிலிருந்து கோவில்பட்டி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது தவறி கீழே விழுந்ததில் மயக்கமடைந்தாா்.
இதையடுத்து, அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா் கஜேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.