கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
பழனியில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முன்விரோதம் காரணமாக ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், பழனி அடிவாரம் அண்ணா செட்டிமடம் பகுதியைச் சோ்ந்த காா்த்தி மகன் புவனேஸ்வரன் (19), பழனி மேற்கு கிரிவீதி பகுதியைச் சோ்ந்த சின்னக்கண்ணு மகன் பிரகாஷ் (எ) சின்னமண்டையன் (29) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், இவா்களின் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ. பிரகாஷ் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.
Advertisement
Advertisement