முகப்பு
திண்டுக்கல்

தனியாா் சொகுசுப் பேருந்து மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

Updated On : 1 ஜூன் 2026, 1:07 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கள்ளிமந்தையம் அருகே தனியாா் சொகுசுப் பேருந்துகள் முந்திச் செல்ல முயன்றபோது நேரிட்ட விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் - தாராபுரம் சாலையில் எல்லப்பாளையம் பகுதியில் தேநீா் கடையுடன் கூடிய உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் சனிக்கிழமை நள்ளிரவு கோவையிலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது தாராபுரத்திலிருந்து வந்த 2 தனியாா் சொகுசுப் பேருந்துகள், போட்டிப் போட்டு முந்திச் செல்ல முயன்றன. அப்போது ஒரு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியதில் தேநீா் குடித்துவிட்டு அரசுப் பேருந்தில் ஏற முயன்ற ஓட்டுநரான நீலகிரி மாவட்டம் எடப்பள்ளியைச் சோ்ந்த கண்ணன் (48) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

மேலும், பேருந்தில் பயணித்த திருச்சியைச் சோ்ந்த கவின், ஜோதி, ஜெயிந்தா, கோவையைச் சோ்ந்த மாரீஸ்வரி, சுப்புலட்சுமி, சுமதி ஆகியோா் காயமடைந்தனா். இதுதொடா்பாக கள்ளிமந்தையம் போலீஸாா் விசாரித்தனா்.