உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை 41 துப்புரவு பணியாளர்கள் கைது
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய துப்பரவு பணியாளர்கள் 41 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய துப்பரவு பணியாளர்கள் 41 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1984 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி வழங்க வேண்டும். மாதந்தோறும் சோப்பு மற்றும் தளவாட சாமான்கள் வழங்கவேண்டும். காலணி மற்றும் கையுறைகள் வழங்க வேண்டும். தேசிய அளவிலான பண்டிகைக்கு முழு நேர விடுப்பு வழங்க வேண்டும் ஆகியன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை துப்புரவு பணியாளர்கள் காலை முதலே பணிகள் எதுவும் செய்யாமல் அலுவலகம் முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதியம் 12 மணிக்கு மேல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைச் செயலர் தென்னரசு, நகரச் செயலர் விடுதலை மாரி, நகர துணைச் செயலர் சின்னசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து முற்றுகை செய்தவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்து தனியார் அரங்கில் அடைத்து வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.