சரவணப் பொய்கையில் தீர்த்த உற்சவம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழா நிறைவாக புதன்கிழமை சரவணப்பொய்கையில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழா நிறைவாக புதன்கிழமை சரவணப்பொய்கையில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
விழாவையொட்டி புதன்கிழமை காலையில் உற்சவர் சன்னதியில் புனித நீர் கொண்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, விநாயகர், சத்திய கிரீஸ்வரர், கோவர்தனாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்பு சுவாமி, தெய்வானையுடன் சரவணப் பொய்கையில் எழுந்தருளினார். அங்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.