மாவட்ட அளவில் யோகாசனப் போட்டி
திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் யோகா நகர் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில், மாவட்ட அளவிலான யோகாசன ப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் யோகா நகர் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில், மாவட்ட அளவிலான யோகாசன ப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு யோகாசன சங்கத் தலைவர் பி.வி. பார்த்தசாரதி தலைமை வகித்தார். சங்க பொதுச் செயலர் யோகி. ராமலிங்கம் போட்டியை தொடக்கி வைத்தார். மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில், 8 முதல் 11, 11 முதல் 14, 14 முதல் 17, 17 முதல் 21, 21 முதல் 25, 25 முதல் 35 மற்றும் 35 வயதுக்கும் மேலுள்ள அனைவரும் பொதுப் பிரிவில் போட்டியிட்டனர்.
இப்போட்டியில் 15 பள்ளி, கல்லூரிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டிகுறித்து, தமிழ்நாடு யோகாசன பொதுச் செயலர் யோகி. ராமலிங்கம் கூறுகையில், மாவட்ட அளவில் வயது வாரியாக 7 பிரிவுகளின் கீழ் நடைபெறும் இப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்கள், ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவர். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள், செப்டம்பர் மாதம் பஞ்சாப்பில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவர் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.