முகப்பு
மதுரை

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முற்றுகை

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 ஜூன் 2026, 1:43 am IST
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.
பகிர்:

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ஜெ. டீலன் ஜெஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டேவிட் ராஜதுரை, மாவட்டத் துணைத் தலைவா் குருகணேஷ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் திருப்பிரகலாதன், பிரியா, தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் போராட்டத்தின்போது, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு கடந்த 11 மாதங்களாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்தும், அதை உடனடியாக வழங்கக் கோரியும் முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

இந்தப் போராட்டத்தில் சங்க நிா்வாகிகள் பிரவீன், காசி, திவ்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.