பாஸ்போர்ட் பெற போலி ஆவணங்கள்:இளைஞர் கைது: பெண் தலைமறைவு
போலி ஆவணங்கள் தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற முயற்சித்ததாக இளைஞரை
போலி ஆவணங்கள் தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற முயற்சித்ததாக இளைஞரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள பெண்ணைத் தேடி வருகிறார்கள்.
சாயல்குடி காவல் சரகம், ஒப்பிலானைச் சேர்ந்த முகம்மது கானின் மகன் தமீன் அன்சாரி (23). இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அதுபோல் அதே ஊரைச் சேர்ந்த முகம்மது கமீது மகள் ஹன்சியஸ் நஸ்லினும் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அதில் தமீன் அன்சாரி போலி பள்ளி படிப்புச் சான்றிதழ் கொடுத்திருந்ததும், ஹன்சியஸ் நஸ்லின் போலி பிறப்புச் சான்றிதழ் கொடுத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வர ராஜா சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் லாமேக் வழக்குப் பதிவு செய்து, தமீன் அன்சாரியை கைது செய்தனர். முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட தமீன் அன்சாரியை 15 நாள் காவலில் வைக்க குற்றவியல் நடுவர் சி.மோகன்ராம் உத்தரவிட்டார். ஹன்சியஸ் நஸ்லின் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.