திருவாடானையில் கடும் பனி மூட்டம்
திருவாடானையில் வழக்கத்தை விட புதன்கிழமை அதிக பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாடானையில் வழக்கத்தை விட புதன்கிழமை அதிக பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தை விட கடும்பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை 9 மணி வரை பனி மூட்டம் விலக வில்லை. சாலைகளில் எதிரே வருவபவர் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. வானக ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே வந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பிறகு காலை 10 மணிக்கே பனி மூட்டம் விலகியது.