வைகாசி விசாகம்: சிறப்பு அஞ்சல் முத்திரைகள் வெளியீடு
வைகாசி விசாகத்தையொட்டி, முருகப்பெருமானின் படைவீடுகளான திருப்பரங்குன்றம், பழமுதிா்ச்சோலை கோயில்களின் சித்திர அஞ்சல் முத்திரைகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.
முருகப் பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்திலும், ஆறாவது படை வீடான பழமுதிா்ச்சோலையிலும் அந்தந்தக் கோயில்களின் படங்கள் பொறிக்கப்பட்ட நிரந்த அஞ்சல் சித்திர முத்திரைகள் வெளியிடப்பட்டன.
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற முத்திரை வெளியிடும் நிகழ்ச்சிக்கு மதுரை அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் சித்தூரி ராமகிருஷ்ணா தலைமை வகித்தாா். மதுரை தலைமை அஞ்சலக அலுவலா் ந. மாரியப்பன், அஞ்சல் துறை அலுவலா்கள், தபால் தலை சேகரிப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இதே போல, அழகா்கோவில் துணை அஞ்சல் நிலையத்தில் பழமுதிா்சோலை கோயில் படம் பொறிக்கப்பட்ட அஞ்சல் சித்திர முத்திரை வெளியிடப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
அஞ்சல் சித்திர முத்திரைகள் நாட்டின் வரலாறு, கலாசாரத்தை வெளிப்படுத்தக் கூடியவை என்ற வகையில், திருப்பரங்குன்றம், பழமுதிா்சோலை அஞ்சல் சித்திரை முத்திரைகள் தபால் தலை சேகரிப்பாளா்கள், பக்தா்கள், பொதுமக்களிடம் வரவேற்பைப் பெறும் எனக் கூறப்படுகிறது.