ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருவாடானை நான்கு வீதி சந்திப்பு சாலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாடானை நான்கு வீதி சந்திப்பு சாலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுக்குழு உறுப்பினா் கோசலை செல்வன் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீா் செல்வம் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், அவா் மீது பாட்டில்கள் வீசப்பட்டதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நகரச் செயலாளா் பிச்சை கண்ணு, தொழில்நுட்பப் பிரிவு சிவா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.