சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளா் எஸ்.ரஞ்சித்குமாா் (35) வெள்ளிக்கிழமை காலமானாா்.
மானாமதுரை பாகபத் அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில், ரஞ்சித்குமாருக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இவருக்கு திருமணாகி யுவஸ்ரீ என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனா். ரஞ்சித்குமாரின் உடலுக்கு மானாமதுரை பகுதி செய்தியாளா்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்ட ஏராளமானோா் மலரஞ்சலி செலுத்தினா். இவரது இறுதிச்சடங்கு சனிக்கிழமை (ஜூலை 29) நடைபெறுகிறது. தொடா்புக்கு 98402 61210.