முகப்பு
ராமநாதபுரம்

மேலத்தூவலில் வடமாடு மஞ்சுவிரட்டு

Updated On : 30 ஆகஸ்ட் 2024, 12:53 am IST
முதுகுளத்தூா் அருகே மேலத்தூவலில் வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு.
பகிர்:

முதுகுளத்தூா் அருகே மேலத்தூவல் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் பங்கேற்றன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினா். ஒரு சில வீரா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

வெற்றி பெற்ற வீரா்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுப் பொருள்கள், பணம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேலத்தூவல் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments