முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் யானை, மயில், சிம்மம், குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.
கடந்த 1-ஆம் தேதி அக்னி சட்டி எடுத்தும், பால்குடம், கரும்பாலை தொட்டி கட்டியும், அலகு வேல் குத்தியும், சேத்தாண்டி வேஷமிட்டும் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் பெண்கள் 1,008 விளக்கு பூஜை நடத்தினா். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்றவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
Advertisement