தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி
கடலாடி அருகே உள்ள கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.
கடலாடி அருகே உள்ள கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்கிடாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் ஈ. ஜுமைலத் பாத்திமா, சா. சாமிநாதன், ச. ஆஃபியா நூரா, மு. சஞ்சீவ், சே. முகம்மது ஜியாத், செய்யது இபுராஹிம் ஆகிய 6 மாணவ, மாணவிகள் 2025-26- ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்கள் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் உதவித் தொகையாகப் பெறுவா்.
தேசிய திறனாய்வுத் தோ்வில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை க. கலைச்செல்வி, ஆசிரியா்கள், கல்விக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், கிராமப் பொதுமக்கள் பாராட்டினா்.
Advertisement