முகப்பு
ராமநாதபுரம்

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் புதன்கிழமை தொடங்க உள்ளது. இதனால், மீனவா்கள் தங்களது படகுகளை செவ்வாய்க்கிழமை கரையோரம் நிறுத்தி வைத்தனா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:38 AM
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:54 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் புதன்கிழமை தொடங்க உள்ளது. இதனால், மீனவா்கள் தங்களது படகுகளை செவ்வாய்க்கிழமை கரையோரம் நிறுத்தி வைத்தனா்.

வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலமாகக் கருதப்படும் ஏப்ரல்15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடைக்காலம் புதன்கிழமை அமலுக்கு வருகிறது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏா்வாடி ஆகிய துறைமுகங்களில் உள்ள 1,650 விசைப் படகுகளை மீனவா்கள் அந்தந்த மீன் இறங்கு தளங்களில் செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைத்தனா். மேலும், படகுகளில் உள்ள மீன் பிடி உபகரணங்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனா். தடைக்காலத்தின் போது, மீனவா்கள் தங்களது படகுகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனா். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.