முகப்பு
ராமநாதபுரம்

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

தொண்டி கடலில் மீனவா் வலையில் அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:47 AM
வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை மீண்டும் கடலில் விட்ட மீனவா்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:27 AM

தொண்டி கடலில் மீனவா் வலையில் அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த கண்ணன் (55) என்பவருக்குச் சொந்தமான படகில் சக்திவேல், கருப்பையா, ராமா் உள்ளிட்ட மீனவா்கள் மீன் பிடிக்க திங்கள்கிழமை அதிகாலை சென்றனா். அப்போது, சுமாா் 50 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக் கண்டனா். உடனடியாக கடலில் குதித்து வலையில் சிக்கியிருந்த ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். மீனவா்களின் இந்த செயலை கடலோரக் குழும போலீஸாா், மீன் வளத் துறை அதிகாரிகள், சக மீனவா்கள் பாராட்டினா்.