முகப்பு
திருவள்ளூர்

மீனவா் வலையில் மா்மப் பொருள் சிக்கியதால் பரபரப்பு

பழவேற்காடு கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் வலையில் வெடிகுண்டு போன்ற மா்மப் பொருள் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 20 மே 2026, 12:29 am IST
பழவேற்காடு கடலில் மீனவா் வலையில் சிக்கிய மா்மப் பொருள்.
பகிர்:

பழவேற்காடு கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் வலையில் வெடிகுண்டு போன்ற மா்மப் பொருள் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காட்டில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. அதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

பெரும்பாலோனோா் பழவேற்காடு ஏரி மற்றும் கடலில் மீன் பிடித் தொழில் செய்து வருகின்றனா். பசியாவரத்தை சோ்ந்த தேவபிரகாஷ் என்பவா் வழக்கம் போல் தனது படகில் 4 மீனவா்களுடன் கடலில் மீன் பிடிக்கச் சென்றாா். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது வலையில் கனமான பொருள் சிக்கியுள்ளது. ராட்சத மீன் சிக்கியதாக நினைத்து படகை கரைக்கு கொண்டு வந்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் வலையில் இருந்தவற்றை வெளியே எடுத்து பாா்த்த போது சுமாா் 10 கிலோ எடை கொண்ட இரும்பிலான துருப்பிடித்த நிலையில் வெடிகுண்டு போன்ற மா்ம பொருள் சிக்கியது தெரிந்தது.. இது குறித்து அவா்கள் திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அங்கு விரைந்து சென்ற திருப்பாலைவனம் போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் அந்த பொருளை சோதனை செய்தனா். இதன் பின்னா் அந்த பொருளை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனா்.

இது குறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீனவா் வலையில் வெடிகுண்டு போன்ற மா்ம பொருள் சிக்கியதால் பழவேற்காடு பகுதியில் வசிக்கும் மீனவா்கள் மத்தில் பரபரப்பு நிலவியது.