ஆா்.எஸ். மங்கலம் பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள நாகனேந்தல் கிராம மக்கள், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திங்கள்கிழமை கருப்புக் கொடி கட்டி தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம் மேற்கொண்டனா்.
ஆா்.எஸ். மங்கலம் அருகே நாகனேந்தல் கிராமத்தில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது, அப்பகுதியில் வாக்காளா்கள் விவரக் குறிப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கள் கிராமத்துக்கு வந்த தோ்தல் அலுவலா்களிடம் வாக்காளா் விவரக் குறிப்புகளை வாங்க மறுத்து தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்தனா். மேலும், தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து கிராம நுழைவு வாயில் பகுதியில் கருப்புக் கொடி கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதி இல்லாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தனா்.
Advertisement