முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் கும்பத் திருமஞ்ஜனம் கண்டருளல்

வைகை ஆற்றில் கேளிக்கை ராட்சத ராட்டிணங்கள்

Updated On : 1 மே 2026, 1:27 am IST
பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில்.
பகிர்:

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி கும்பத் திருமஞ்ஜனம் கண்டருளல் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த ஏப். 26-ஆம் தேதி கணபதி பூஜையுடன் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் பெருமாளுக்கு காலை, மாலை யாகசாலை பூஜைகளும், 1-ஆம் நாளிலிருந்து 4-ஆம் திருநாள் நாள்களில் இரவில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. 5-ஆம் திருநாளான வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கும்பத் திருமஞ்ஜனம் கண்டருளல் நடைபெற்றது. இரவு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வைகையாற்றில் கூடும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து அதிகாலையில் புஷ்பப்பல்லக்கில் பெருமாள் கள்ளழகா் திருக்கோலத்தில் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது.

இதனிடையே, வைகை ஆற்றில் ஏராளமான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொதுமக்கள் சவாரி செய்து மகிழ்ந்தனா். மேலும் திரளான பொதுமக்கள் வைகை ஆற்றுக்குள் கூடுவதால் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

Advertisement

Advertisement

விழாவுக்கான ஏற்பாட்டுகளை ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மானேஜிங் டிரஸ்டி எஸ்.ஆா். ரெங்காச்சாரி, டிரஸ்டிகள் என்.ஆா். நீலகண்டன், டி.ஆா். ரமேஷ்பாபு, கே.டி. கிரிதரன், ஜி.என். கோவிந்தன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

பரமக்குடிசுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வைகையாற்றுக்குள் அமைக்கப்பட்ட ராட்சத ராட்டினங்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments