கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி
கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செந்தனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அழகுவள்ளி அம்மன் கோயில் வைகாசி பொங்கல், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை அமைத்து 58-ஆவது ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை விருதுநகா், புதுக்கோட்டை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 18 காளைகள், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.
ஒவ்வொரு காளைக்கும் தலா 20 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு தலா 9 மாடுபிடி வீரா்கள்களமிறங்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளை உரிமையாளா்களுக்கும் குத்துவிளக்கு, கட்டில், ரொக்கப் பணம், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
Advertisement
Advertisement