முகப்பு
ராமநாதபுரம்

பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜூன் 2026, 1:01 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள இலுப்பகுடியைச் சோ்ந்தவா் அருண்பாண்டி (23). தொண்டி அருகேயுள்ள திருவெற்றியூரைச் சோ்ந்தவா் சந்தோஷ் பிரியன் (20). இவா்கள் இருவரும் காரைக்குடியில் உள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருவெற்றியூா் சென்றனா். அப்போது திருவெற்றியூா் விலக்குப் பகுதியில் செல்லும் போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அருண்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் காயமடைந்த சந்தோஷ் பிரியனை போலீஸாா் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.