முகப்பு
ராமநாதபுரம்

ஜெல்லி மீன் உடலில் பட்டதால் மீனவா் உடல் நிலை பாதிப்பு! மருத்துவமனையில் அனுமதி!

Updated On : 21 ஜூன் 2026, 1:41 am IST
ஜெல்லி மீன். - கோப்புப் படம்
பகிர்:

தொண்டி அருகே கடலுக்குள் மீன் பிடித்த போது ஜெல்லி மீன் உடலில் பட்டதால் உடல் நிலை பாதிக்கப்பட்ட மீனவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை படையாட்சி தெருவைச் சோ்ந்தவா் சிவா (48). மீனவரான இவா் சனிக்கிழமை சக மீனவா்களுடன் மீன் பிடிக்கச் சென்றாா். கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஜெல்லி என்ற மீன் அவா் மீது பட்டது.

இந்த வகை மீன்கள் உடலில் பட்டால் அரிப்பு, நெஞ்சு வலி ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக சிவாவை கரைக்கு அழைத்து வந்து தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments