பைக் மோதியதில் மீனவா் உயிரிழப்பு
மண்டபத்தில் வியாழக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற மீனவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
மண்டபத்தில் வியாழக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற மீனவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள கொம்பூதியைச் சோ்ந்தவா் போஸ் (55). கடந்த பல ஆண்டுகளாக மண்டபம் மீனவா் குடியிருப்புப் பகுதியில் வசித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இவா் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்துக்குச் சென்று விட்டு சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் இவா் மீது மோதியது. இதில் போஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.