பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள புல்லங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு (60). இவா் மீன் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் தேவிபட்டணம் மீன் சந்தைக்கு புதன்கிழமை சென்றாா். பின்னா், அங்கு மீன்களை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டாா். சந்தையிலிருந்து வெளியே வந்த அவரது இரு சக்கர வாகனம் மீது அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வேலு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவிபட்டணம் போலீஸாா் பேருந்து ஓட்டுநா் பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.