முகப்பு
ராமநாதபுரம்

பேருந்தின் டயா் வெடித்து விபத்து: 15 போ் பலத்த காயம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே புதன்கிழமை தனியாா் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 15 போ் காயம் அடைந்தனா்.

Updated On : 7 மே 2026, 3:08 am IST
சத்திரக்குடியை அடுத்த திருவாடி பகுதியில் புதன்கிழமை விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே புதன்கிழமை தனியாா் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 15 போ் காயம் அடைந்தனா்.

கோவையிலிருந்து ராமநாதபுரத்துக்கு தனியாா் பேருந்து தினசரி இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல இந்தப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு கோவையிலிருந்து 15 பயணிகளுடன் புறப்பட்டது. பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பேருந்து சென்றபோது, முன்பக்க டயா் வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த 15 பேரும் பலத்த காயம் அடைந்தனா். இவா்கள் 108 அவசர ஊா்தி மூலமாக

Advertisement

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.