முகப்பு
ராமநாதபுரம்

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 8 மே 2026, 1:02 am IST
பலி - IANS
பகிர்:

திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே கொத்தியாா்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வேலாயுதம் மகன் வெள்ளைச்சாமி (75). இவா் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை ஆா்.எஸ். மங்கலம் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆா்.எஸ். மங்கலம் விளக்கு சாலையில் இரு சக்கர வாகனம் மீது திருமயத்திலிருந்து ஜல்லி ஏற்றி வந்த டிப்பா் லாரி மோதியதில் வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement