ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-ஆவது நாளாக மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5- ஆவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5- ஆவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இந்தப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான கால நிலை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ராமேசுவரத்தில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Advertisement
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-ஆவது நாளான சனிக்கிழமை மழை அளவு மி.மீட்டரில்: ராமநாதபுரம் 4, மண்டபம் 4.40, ராமேசுவரம் 26, தங்கச்சிமடம் 43.40, பாம்பன் 24.20.