முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-ஆவது நாளாக மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5- ஆவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Updated On : 10 மே 2026, 1:09 am IST
மழை - கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5- ஆவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இந்தப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான கால நிலை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ராமேசுவரத்தில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Advertisement

Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-ஆவது நாளான சனிக்கிழமை மழை அளவு மி.மீட்டரில்: ராமநாதபுரம் 4, மண்டபம் 4.40, ராமேசுவரம் 26, தங்கச்சிமடம் 43.40, பாம்பன் 24.20.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments