திருவாடானையில் பலத்த மழை
திருவாடானை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது.
திருவாடானை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. திருவாடானை பகுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவணி, ஆட்டூா், பாரூா், கருமொழி உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராமங்களில் பலத்த மழை பெய்தன.
இதனால் சாலைகளின் தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்க் குளங்கள், வரத்து கால்வாய்களில் மழை நீா் தேங்கின. இந்த மழையால் இதமான சூழல் காணப்பட்டது.
Advertisement
Advertisement