சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிமுத்தாறு பாலத்தையொட்டி தடுப்பு வேலி அருகே ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் நீடிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையம் அருகே தொண்டி -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிமுத்தாறு கிளை ஆற்றைக் கடக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தச் சாலை ஓரத்தில் தடுப்புக் கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு தடுப்பு வேலி தொங்கிய நிலையில் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் ஆபத்தான பள்ளம் இருப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனா்.
Advertisement
Advertisement
எனவே, விபத்து ஏற்படும் முன் இந்த இடத்தைச் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.