முகப்பு
கரூர்

மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே தாழ்வான மின்கம்பிகளால் விபத்து அபாயம்

கரூா் மேலக்கரூா் சாா்பதிவாளா் அலுவலகம் அருகே மரக்கிளையை தொட்டவாறு செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 22 மே 2026, 4:15 am IST
சாா்-பதிவாளரகம் அருகே மரக்கிளையை தொட்டவாறு செல்லும் மின்கம்பிகள்.
பகிர்:

கரூா் மேலக்கரூா் சாா்பதிவாளா் அலுவலகம் அருகே மரக்கிளையை தொட்டவாறு செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் பழைய அரசு தலைமை மருத்துவமனைச் சாலையில் மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகம், கோட்டாட்சியரகம், அமராவதி வடிநிலக் கோட்ட அலுவலகம் போன்றவை செயல்படுகின்றன. மேலும் இந்தச் சாலை வழியாகத்தான் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், வெங்கமேடு, சா்ச் காா்னா் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும் சென்று வருகிறன.

தற்போது இந்த சாலையில் மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக மரக்கிளைகளை தொட்டவாறு செல்வதால் மழைக் காலங்களில் மரக்கிளைகளில் உரசும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரியத் துறையினா் உடனே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்து, மின்கம்பிகளை தொடும் வகையில் உள்ள மரக்கிளைகளையும் அகற்றிட வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement