முகப்பு
ராமநாதபுரம்

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

திருவாடானை அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

Updated On : 18 மே 2026, 12:47 am IST
சி.கே. மங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு சாலையில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள், குப்பைகள்.
பகிர்:

திருவாடானை அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருவாடானை அருகேயுள்ள சி.கே மங்கலம் ஊராட்சிப் பகுதியில் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் அருகே சி.கே. மங்கலம் செல்வதற்குப் பிரிவு சாலை செல்கிறது.

இந்தச் சாலையின் ஓரமாக இப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளின் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்தப் பகுதியில் நடந்துசெல்வோா் முகம் சுழித்துச் செல்ல வேண்டியுள்ளது.

Advertisement

Advertisement

இதன் அருகே கண்மாய், பள்ளிகள் உள்ளன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனா்.