முகப்பு
சிவகங்கை

வெளிநாட்டில் இறந்த கணவனின் உடலை மீóட்டுத்தர மனைவி கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் இருமதி கிராமத்தைச் சேர்ந்த பா.முனியம்மாள் அபுதாபியில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தர மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 13 மே 2013, 12:13 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம் இருமதி கிராமத்தைச் சேர்ந்த பா.முனியம்மாள் அபுதாபியில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தர மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 இருமதி கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாளின் கணவர் பாலுச்சாமி (57). இவர் அபுதாபியில் உள்ள ஒரு கம்பெனியில் பணியிலிருக்கும் போது இறந்து விட்டதாக ராஜபூபதி என்பவர் 25.4.13 அன்று போன் மூலமாக தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து அதிர்ச்சியடைந்த முனியம்மாள் கீழச்சிவல்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன் மூலம் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

   மனு பரிசீலனை செய்யப்பட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு துரித நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.