முகப்பு
சிவகங்கை

தேவகோட்டை அருகே பூட்டிய வீட்டில் 46 பவுன் நகை திருட்டு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பகலில் பூட்டிய வீட்டை உடைத்து 46 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:37 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பகலில் பூட்டிய வீட்டை உடைத்து 46 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
 தேவகோட்டை அருகே கல்லல் சாலையில் உள்ள பெரியகாரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(64). இவர், அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டராம். மாலை திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 46 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் ரேகைகளைப் பதிவு செய்தனர். இது குறித்தப் புகாரின் பேரில் வேலாயுதபட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.