சிவகங்கை ஆட்சியரகத்தில் நாளை இலவச சித்த மருத்துவ முகாம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (டிச.26) இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (டிச.26) இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சார்பில் புதன்கிழமை (டிச.26) இலவச சித்த மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கழுத்து வலி, அல்சர், மூட்டுவலி, கல்லடப்பு, ஆஸ்துமா, இருமல், ரத்தசோகை, சர்க்கரை நோய், திருமூலர் மூச்சுப் பயிற்சி, சித்தர் முறை யோகா சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படும்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.