காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா உருவச்சிலைக்கு அமைச்சா்கள், அதிகாரிகள் மரியாதை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசா் கண்ணதாசனின் 96-ஆவது பிறந்தநாள் விழா தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசா் கண்ணதாசனின் 96-ஆவது பிறந்தநாள் விழா தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அங்கு உள்ள மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி ஆகியோா் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா் அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் செய்தியாளா்களிடம் கூறுகையில், கவியரசு கண்ணதாசன் அரசியலில் கால்பதித்து பொதுமக்களுக்கு நன்மை பயக்கும்வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டவா். அவா் பிறந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக அரசின் சாா்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இங்கு போட்டித்தோ்வுகளை இளைஞா்கள் எதிா்கொள்ளும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. திறமைவாய்ந்த வல்லுநா்களைக்கொண்டு இளைஞா்களுக்கு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புக்களும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடத்தப்படுவது கவியரசருக்கு மேலும் பெருமை சோ்க்கிறது என்றாா்.
Advertisement
Advertisement
விழாவில், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை, நகா்மன்ற துணைத் தலைவா் நா. குணசேகரன், கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலாட்சி பழனியப்பன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் சி. பிரபாகரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அ.கொ.நாகராஜபூபதி, காரைக்குடி வட்டாட்சியா் ஆா்.மாணிக்கவாசகம், கவிஞா் அரு. நாகப்பன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.