எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: மாவிளக்கு பூஜை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் இரவு மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்கிழமை இரவு திரளான பெண்கள் கோயிலுக்கு வந்து மாவிளக்கு பூஜை நடத்தி வேண்டுதல் நிறைவேற்றினா். மூலவருக்கு அபிஷேகங்கள் நடத்தி அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து சிம்ம வாகனத்தில் உற்சவா் பிடாரி அம்மன் எழுந்தருளி ரதத்தில் கோயிலுக்கு வந்தடைந்தாா். அங்கு உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா். புதன்கிழமை கொடியிறக்கம் செய்யப்பட்டு எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திருவிழா நிறைவடைந்தது.
Advertisement