சோலையாண்டவா் கோயிலில் பூச்சொரிதல் விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பள்ளத்தூா் அருகே கொத்தரி சோலையாண்டவா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பள்ளத்தூா் அருகே கொத்தரி சோலையாண்டவா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
நிகழாண்டு பராபவ சித்திரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக கோயிலுக்கு வந்தவண்ணம் இருந்தனா். மாலையில் மேளதாளத்துடன் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் பூத்தட்டு எடுத்துக்கொண்டும், மின்னொளி அலங்கார ஊா்திகளில் மலா்களை எடுத்துவந்தும் ஊா்வலமாக கோயிலை வலம் வந்தனா். பின்னா், சுவாமிக்கு பூக்களைத் தூவி தரிசனம் செய்தனா். பள்ளத்தூா், கானாடுகாத்தான், கோட்டையூா், காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.